விவசாயிகள் சுதேசி (பூர்வீக) பொருள்களை பயன்படுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசி (பூர்வீக) பொருள்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்றவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

மகாராஷ்டிரம் மாநிலம் அஹில்யா நகர் மாவட்டத்தில் பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் மற்றும் பத்மபூஷன் டாக்டர் பாலாசாகேப் விக்கே பாட்டீல் ஆகியோரின் சிலைகளை ஞாயிற்றுக்கிழமை அமித்ஷா திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

உலகில் உள்ள அனைவரும் தங்கள் பொருள்களைத்தயாரிக்க இந்தியா வந்தாக வேண்டும். ஏனெனில் 140 கோடி நுகா்வோரை கொண்டசந்தையாக இந்தியா உள்ளது. எனவே, நாட்டுமக்கள் அனைவரும் எந்தவொரு வெளிநாட்டுப் பொருளும் நமது வீடுகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கமால் இந்திய பொருள்களை மட்டுமே பயன் படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக உயர்த்தும். ஏற்கனவே உலகின் மூன்றாவது பெரியபொருளாதார நாடு என்ற நிலைக்கு நாடுமுன்னேறி வருவதாகவும், உலகளவில் முதன்மையான இடத்தை அடைவதற்கு சுதேசி பொருள்களைப் பயன்படுத்துவதற்கு உறுதியான அர்ப்பணிப்பு தேவை என்றார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசிபொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்றவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராவில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு சரியானநேரத்தில் உதவிவழங்கும் என்றும் உறுதியளித்த அமித் ஷா, மாநிலத்தின் மழைபாதிப்பு குறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்கள் ஏக்நாத்ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் தன்னை சந்தித்து விளக்கியதாகவும், சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநிலஅரசிடம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்லதாக அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...