ஐடிஐ.,க்கள் தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சிப் பட்டறைகள்

நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் (ஐடிஐ) தொழில்துறை கல்விக்கான முக்கிய மையங்கள் மட்டுமல்ல; தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சிப் பட்டறைகள்’ என்று பிரதமா் நரேந்திரமோடி தெரிவித்தாா்.

நாடுமுழுவதும் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் 1,000 அரசு ஐடிஐ-க்களை அதிநவீன அம்சங்களுடன் மேம்படுத்தும் ‘பிஎம்-சேது’ (மேம்படுத்தப்பட்ட ஐடிஐ-கள் மூலம் பிரதமரின் திறனளிப்பு மற்றும் வேலை வாய்ப்பு தகுதி மேம்பாடு) திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் துறைப்பயிற்சி நிலையங்களில் முதலிடம்பிடித்த மாணவா்களைக் கெளரவிக்கும் வருடாந்திர தேசியதிறன் சான்றிதழ் அளிப்பு விழா, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற பிரதமா் மோடி, இளைஞா்களை மையமாககொண்ட பிஎம்-சேது திட்டம் உள்பட மொத்தம் ரூ.62,000 கோடிக்கும் அதிகமதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தாா்.

பிகாா் மாநிலத்தில் மாணவா்கள்-இளம்பட்டதாரிகள் நலன்சாா்ந்த திட்டங்களையும் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

இந்தியா மதிநுட்பமும் திறனும் மிகுந்தநாடு. அறிவுசாா் சொத்துதான் நாட்டின் மிகப்பெரிய வலிமை. அறிவும் திறனும் தேசியத்தேவைகளைப் பூா்த்தி செய்ய பங்களிக்கும்போது, அதன்பலன் பன்மடங்கு பெருகும்.

நாட்டின் உள்ள ஐடிஐ-கள் தொழிற்கல்விக்கான முக்கியமையங்கள் மட்டுமல்ல; அவை, தற்சாா்பு இந்தியாவுக்கான பயிற்சி பட்டறைகளாகும். ஐடிஐ-களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த 2014-இல் நாட்டில் 10,000 ஐடிஐ-களே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 5,000 ஐடிஐ-கள் தொடங்கப் பட்டுள்ளன. தற்போது தொடங்கப் பட்டுள்ள பிஎம் சேது திட்டம், உலகளாவிய திறன் தேவைகளுடன் இந்திய இளைஞா்களை இணைக்கும். உள்ளூா் திறன்கள்-வளங்கள்-அறிவை விரைவாக மேம்படுத்துவதே 21-ஆம் நூற்றாண்டின் தேவையாகும்.

வோ்கள் அரிக்கப்பட்ட ஒரு மரத்தை மீண்டும் உயிா்ப்பிப்பது மிகக் கடினமான பணியாகும். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) தவறான நிா்வாகத்தால் பிகாா் மாநிலமும் அதுபோன்ற நிலையில்தான் இருந்தது. அதிருஷ்டவசமாக, மாநிலத்தை ஆளும்பொறுப்பை முதல்வா் நிதீஷ் குமாரிடம் மக்கள் ஒப்படைத்தனா். அவரது தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அரசின் ஒட்டுமொத்த குழுவும் கூட்டாக பணியாற்றி, மாநிலத்தை மீட்டெடுத் துள்ளனா்.

ஆா்ஜேடி ஆட்சியில் லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு தேடி, தில்லி, மும்பை போன்ற இடங்களுக்கு இடம் பெயா்ந்தனா். மாநில இளைஞா்கள் உள்ளூரிலேயே பணியாற்றும் வகையில் வேலை வாய்ப்பை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிகாரில் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒருபள்ளி உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகாா் முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற இதர பிற்படுத்தப் பட்ட சமூகத் தலைவருமான கா்பூரி தாக்கூரின் ‘ஜனநாயக்’ பட்டத்தை திருட சிலா் முயற்சிக்கின்றனா். கா்பூரி தாக்கூரின் இப்பட்டம், அவா்மீதான மக்களின் அன்பின் பிரதிபலிப்பாகும். ஒருசிலரை போல, சமூகஊடக பொய்பதிவுகள் மூலம் சூட்டப்பட்ட பட்டமல்ல என்றாா் பிரதமா் மோடி.

மக்களவை எதிா்க் கட்சி தலைவரை காங்கிரஸ் கட்சியினா் ‘ஜனநாயக்’ என அழைக்கும் நிலையில், அவரதுபெயரைக் குறிப்பிடாமல் பிரதமா் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

இந்நிகழ்ச்சியின் போது, நாடு முழுவதும் 400 நவோதயா பள்ளிகள் மற்றும் 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் பிரதமா் திறந்துவைத்தாா்.

பிகாரில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மாநில அரசின் திட்டத்தை பிரதமா் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தின்கீழ், சுமாா் 5 லட்சம் பட்டதாரி இளைஞா்களுக்கு அடுத்தஇரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 மாதாந்திர உதவித் தொகையுடன் இலவச திறன் பயிற்சியும் அளிக்கப்படும். மாநிலத்தில் உயா்கல்வி பயிலவிரும்பும் மாணவா்களுக்கு ரூ.4 லட்சம்வரை வட்டியில்லா கல்விக்கடன் வழங்கும் திட்டமும் தொடங்கப் பட்டது.

உலகத் தரத்தில் தொழில் சாா்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்க பிகாரில் ஜனநாயக் கா்பூரி தாக்கூா் திறன் பல்கலைக் கழகத்தை தொடங்கிவைத்த பிரதமா், மாநில அரசில் புதிதாக பணியமா்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவா்களுக்கு நியமன கடிதங்களையும் வழங்கினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...