மேற்குவங்கத்தில் தலைவர்கள் மீதான வன்முறை தாக்குதல்களின் சம்பவங்களுக்கு எதிராக, அந்தமாநில முதல்வர் மமதா பானர்ஜியை பாஜக கடுமையாகக் குற்றம்சாட்டியது.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில்,
பாஜக தலைவர்கள் மீதான தாக்குதல் சம்பங்களை மூடிமறைக்கவும், தாக்குதல் சம்பவம் தொடர்புடையவர்களை மமதா பாதுகாக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
அலிபுர்துவாரில் வெள்ள நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும்போது பாஜக எம்எல்ஏ மனோஜ்குமார் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதேபோன்று மேற்கு வங்கத்தின் வடக்குப்பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தூர்ஸ் பகுதிக்கு வந்தபோது ஒருகும்பல் நடத்திய தாக்குதலில் மால்டா மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் பாஜக எம்பி முர்முவும், எம்எல்ஏ சங்கர் கோஷும் காயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின்கீழ் அரசியல் வன்முறை நிறுவன மயமாக்கப்பட்டு, இயல்பாக்கப்பட்டு, சட்டப் பூர்வமாக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் தலைமைதாங்குவது திரிணமூல் காங்கிரஸ் அல்ல, தலிபானின் மனநிலை மற்றும் கலாசார அரசாங்கமே என்று அவர் கூறினார், மேற்கு வங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பு இல்லை.
மாஃபியாக்கள், ஜிஹாதிகள் மட்டும் திரிணாமுல் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளன. பாஜக தலைவர் களுக்கு எதிராக நடத்தப் பட்ட கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கேள்விஎழுப்பினார். இவ்வாறு அவர் பேசினார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |