மனநலம் ஆரோக்கியம் தான் நமது ஒட்டுமொத்த நலவாழ்வின் அடிப்படையானது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். அக்டோபர் 10 ஆம் தேதி ஆண்டுதோறும் உலகமனநல தினமாக அனுசரிக்கபடுகிறது. உலக மனநல கூட்டமைப்பின் (WFMH) முன் முயற்சியால் 1992 ஆம் ஆண்டு முதல் உலகசுகாதார அமைப்பினால் உலக மனநலதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மனநல தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ மனநல ஆரோக்கியம் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படையான பகுதியாகும் என்பதை உலகமனநல தினம் நமக்கு நினைவூட்டுகிறது.
வேகமான உலகில், இந்நாள் மற்றவர்களிடம் கருணையை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.மன நலம் பற்றிய உரையாடல்கள் மிகவும் பிரதான நீரோட்டமாக மாறும் சூழல்களை உருவாக்க நாம் கூட்டாக உழைப்போம். இந்தத்துறையில் பணியாற்றி மற்றவர்கள் குணமடைந்து மகிழ்ச்சியைக் காண உதவுபவர்களுக்கு எனது பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |