மீனவர் நலன் குறித்து இலங்கை பிரதமரிடம் பேசினேன்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பின் போது நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தசந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, “இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள்குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியா – இலங்கை இடையேயான ஒத்துழைப்பு, இருநாட்டு மக்களின் செழிப்புக்கும், பிராந்தியத்தின் நலனுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அவருக்கு அன்பான வரவேற்பை அளித்த பிரதமர், வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – இலங்கை உறவுகளுக்கு அவருடைய வருகை புதியஉத்வேகத்தை அளிக்கும் என கூறினார்.

இந்த ஆண்டு ஏப்ரல்மாதம் தான் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அப்போது அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் கலந்துரை யாடியதை சுட்டிக்காட்டினார். கல்வி, தொழில்நுட்பம், புதுமை, மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு, நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்புஉறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், அதிபர் அனுரகுமார திசநாயக்கவுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...