விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது

பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நடத்திய ஆய்வுகூட்டத்தில், காப்பீடு நிறுவனங்கள் சிலரது பயிர் பாதிப்புக்கு ஒருரூபாய் முதல் 21 ரூபாய் வரை மட்டும் இழப்பீடு வழங்கியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது விவசாயிகளை கிண்டல்செய்யும் செயல் என அதிருப்தி தெரிவித்த அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பயிர்சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஒரே ஒருரூபாயை கொடுத்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

குறைந்த செலவில் விவசாய பயிர்களுக்கு காப்பீடுவசதி அளிப்பதற்காக 2016ம் ஆண்டின் காரிப் பருவத்தின்போது பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. விதைப்புக்கு முன்பு தொடங்கி அறுவடைக்கு பிந்தைய காலம் வரை இயற்கை சீற்றங்களால் பயிர்சேதம் ஏற்பட்டால், இத்திட்டத்தில் இழப்பீடு பெறலாம்.

இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிர விவசாயிகளிடம் ஆன்லைன் வழியாக அவர் கலந்துரை யாடினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காப்பீட்டு நிறுவனங்கள் ஒருரூபாய், மூன்று ரூபாய், 21 ரூபாய் என்று பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கியிருப்பதாக விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.

இது, விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்காது. இவ்வாறுசெய்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...