பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நடத்திய ஆய்வுகூட்டத்தில், காப்பீடு நிறுவனங்கள் சிலரது பயிர் பாதிப்புக்கு ஒருரூபாய் முதல் 21 ரூபாய் வரை மட்டும் இழப்பீடு வழங்கியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது விவசாயிகளை கிண்டல்செய்யும் செயல் என அதிருப்தி தெரிவித்த அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பயிர்சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஒரே ஒருரூபாயை கொடுத்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
குறைந்த செலவில் விவசாய பயிர்களுக்கு காப்பீடுவசதி அளிப்பதற்காக 2016ம் ஆண்டின் காரிப் பருவத்தின்போது பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. விதைப்புக்கு முன்பு தொடங்கி அறுவடைக்கு பிந்தைய காலம் வரை இயற்கை சீற்றங்களால் பயிர்சேதம் ஏற்பட்டால், இத்திட்டத்தில் இழப்பீடு பெறலாம்.
இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிர விவசாயிகளிடம் ஆன்லைன் வழியாக அவர் கலந்துரை யாடினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காப்பீட்டு நிறுவனங்கள் ஒருரூபாய், மூன்று ரூபாய், 21 ரூபாய் என்று பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கியிருப்பதாக விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.
இது, விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்காது. இவ்வாறுசெய்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |