ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை பிரதமர் மோடி நேரில்சந்தித்து வாழ்த்தினார் அப்போது ரிக்கெட் வீரர் ஹர்லீன் கவுர் தியோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் நீங்கள் எப்போதும் பளபளப்பாக உள்ளீர்கள், உங்கள் சருமபராமரிப்பு என்ன கேள்வி எழுப்பினார்.

2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை வெற்றியை வரலாற்றுச் சிறப்பு மிக்க முறையில் கொண்டாடும் வகையில், நேற்று நவம்பர் 5ம் தேதி லோக்கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் இந்தியமகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இந்த உரையாடலின் போது, ​​கிரிக்கெட்வீரர் ஹர்லீன் கவுர் தியோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் உங்கள் சருமபராமரிப்பு வழக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்

இதற்குபதிலளித்த பிரதமர் மோடி, “நான் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை… நான் 25 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருக்கிறேன். இவ்வளவு ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்ததாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று நகைச்சுவையுடன் கூறினார்.

“2017 ஆம் ஆண்டு உங்களை கடைசியாக சந்தித்தபோது, ​​கோப்பையை பெறமுடியாமல் போனது எங்களுக்கு நினைவிருக்கிறது. ஆனால் இந்தமுறை, நாங்கள் உலக சாம்பியன்களாகிவிட்டோம் என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். உங்களை மீண்டும் சந்திப்பது ஒருமரியாதை, மேலும் நாட்டைப் பெருமைப்படுத்துவதைத் தொடர நாங்கள் நம்புகிறோம்,” என்று ஹர்மன்ப்ரீத் கூறினார்.

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்துவரும் பாரம்பரியத்திற்கு வீரர்களின் உறுதிப்பாடு, ஒற்றுமை மற்றும் பங்களிப்புக்காக பிரதமர் மோடி அவர்களைப் பாராட்டினார்.

“நீங்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க ஒன்றை சாதித்துள்ளீர்கள், “இந்தியாவில், கிரிக்கெட் என்பது வெறும்விளையாட்டு மட்டுமல்ல – அது மக்களின் வாழ்க்கையின் ஒருபகுதியாகும். கிரிக்கெட் செழிக்கும்போது, ​​நாடு கொண்டாடுகிறது; அது தடுமாறும் போது, ​​முழுநாடும் அதை உணர்கிறது.” என்று பிரதமர் கூறினார்

இந்திய அணியின்தொடக்க வீரரான ஸ்மிரிதி மந்தனா அணிக்கு வெற்றிக்கு கூட்டு முயற்சியே காரணம் என்று பிரதமரிடம் பேசினார்

அவர் பேசியதாவது “இந்த போட்டியிலிருந்து எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பலன் என்னவென்றால், ஒவ்வொரு வீரரும் வெற்றிக்கு பங்களித்ததாக பெருமையுடன் சொல்லமுடியும். ஒவ்வொரு தனிநபரின் முயற்சியும் முக்கியமானது,” என்று மந்தனா கூறினார்.

“2017-ல் உங்களை சந்தித்த போது, ​​நாங்கள் கோப்பையைக் கொண்டு வர முடியவில்லை. உங்கள் எதிர் பார்ப்புகளைப் பற்றி நாங்கள் உங்களிடம் கேட்டோம், உங்கள் பதில் அடுத்த 6-7 ஆண்டுகளுக்கு எங்களுக்கு நிறையஉதவியது. இந்தியாவில் முதல் உலகக்கோப்பையை வென்றது எங்கள் விதியில்தான் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் எங்களுக்கு உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். இப்போதெல்லாம் எல்லா துறைகளிலும் பெண்களைப் பார்க்கிறோம், அது இஸ்ரோவாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த துறையாக இருந்தாலும் சரி. இது எங்களுக்கு நிறையஉத்வேகம் அளிக்கிறது…” என்று அவர் கூறினார்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...