தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ஆனால் விமானநிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார். . பயணிகள் நாளை முதல் பெரியபிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். இண்டிகோ தனது முழுத்திறனுடன் செயல்பட இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.

இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறையால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான விமான சேவைகள் ரத்து செய்ய பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தேசிய அளவில் இண்டிகோ பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு என்டிடிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு போதுமான ஓய்வுகிடைப்பதை உறுதிசெய்யும் புதிய FDTL விதிமுறைகள் நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் மற்ற எந்தவிமான நிறுவனங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. இது தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது.

இந்த பிரச்னை தீர்க்கப்படும் நிலையில் உள்ளது என்று என்னால் உறுதியாக கூறமுடியும். பெருநகர விமான நிலையங்களில் பெரியநெரிசல் ஏற்பட்டது… மேலும் டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெரும்பாலான பெருநகர விமான நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக இருந்த அனைத்துப் பயணிகளின் பிரச்சனையும் சரியாகும். மற்ற இடங்களிலும் இன்றிரவுக்குள் முடிந்துவிடும். இண்டிகோ மீண்டும் நாளை முதல் குறைந்தளவு பயணிகளுடன் செயல்பாடுகளைத் தொடங்கப் போகிறது.

செயல்பாடுகள் சீரானவுடன், இண்டிகோ நிறுவனத்தினர் பயணிகளின் எண்ணிக்கையை படிபடிப்பாக அதிகரிக்கபோகிறார்கள். எனவே பயணிகள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள்… நாளை முதல் நடப்பதைக் காண்பீர்கள். இண்டிகோ தனது முழுமையான செயல்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்” என்றார்.

விமான போக்குவரத்து அமைச்சகமோ அல்லது விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ-வோ (DGCA) நிலைமையை முன்கூட்டியே ஏன் கையாளவில்லை என்ற கேள்விக்கு பதில்அளித்த அமைச்சர் ராம்மோகன் நாயுடு, இது முற்றிலும் தவறு.. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்யும் புதிய FDTL விதிமுறைகள் நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்த பின்னர், அமைச்சகமும் ஒழுங்குமுறை அமைப்பும் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது என்றார்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...