பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று இந்திய துறையில் பெரியமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீட்டு அளவுகளை அதிகரிப்பது குறித்து முக்கியஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சரவை இன்று காப்பீட்டுத்துறையில் சார்ந்த் நிறுவனங்களில் இருக்கும் வெளிநாட்டு நேரடிமுதலீடு (FDI) வரம்பை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதோடு இத்துறையை வலுப்படுத்த பலசீர்திருத்தங்களும் அறிமுகப் படுத்துவதாக தெரிவித்துள்ளது. இது இந்திய காப்பீட்டுச் சந்தையில் புதியபாதைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் சுமார் 82,000 கோடி ரூபாய் அளவிலான நேரடிமுதலீடு வந்துள்ளது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் மூலம் இந்தமுதலீட்டு அளவை அடுத்த 5 வருடத்தில் இரட்டிப் பாக்கலாம். இதோடு இந்தமசோதா குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 19 உடன் முடிவடைகிறது.
மேலும் மத்திய நிதியமைச்சகம் இன்சூரன்ஸ்சட்டம் 1938ல் பல புதிய மாற்றங்களை கொண்டுவரவும், இதோடு 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுக்கு மாற்றத்தையும் நடைமுறைக்கு கொண்டுவரலாம் என பரிந்துரை செய்துள்ளது.
தற்போது காப்பீட்டு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டுஅளவு 74 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. இப்போது 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முழுஉரிமையுடன் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களை முழுமையாக வாங்கலாம். இதனால் பலநூறு பில்லியன் டாலர் முதலீடு புதிதாக வர வாய்ப்புள்ளது.
இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் உலகளவில் பயன் படுத்தும் புதிய தொழில்நுட்பம், அதிகமூலதனம், சிறந்த சேவைதரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வாய்ப்பாக அமையும். இதேவேளையில் சாதாரண மக்களுக்கு காப்பீட்டு ப்ரீமியம்விலை குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த மாற்றம் காப்பீட்டுத் துறையில் போட்டியை அதிகரிக்கும். தற்போது 30க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. புதியவெளிநாட்டு நிறுவனங்கள் வருவதால் சேவைதரம் உயரும், புதிய பாலிசிகள் அறிமுகமாகும்.
குறிப்பாக லைப்இன்சூரன்ஸ், சுகாதார காப்பீடு, வாகன காப்பீடு போன்றவற்றில் புதிய திட்டங்கள் வரலாம். இது மக்கள்மத்தியில் காப்பீட்டு திட்டத்தை பெறுவது அதிகரிக்கும். தற்போது இந்தியாவில் காப்பீட்டு ஊடுருவல் சர்வகதேச சராசரியைவிட குறைவு.
100 சதவீத FDI அனுமதி இந்தியாவுக்கு பலவழிகளில் பயன் தரும். முதலாவதாக பெரியஅளவில் வெளிநாட்டு மூலதனம் இந்தியாவுக்கு வரும். இரண்டாவதாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மூன்றாவதாக காப்பீட்டு நிறுவனங்களின் மூலதனம் வலுவடைந்து பெரியளவில் கிளைம்-களை சமாளிக்கமுடியும். நான்காவதாக தொழில்நுட்பம், AI, டிஜிட்டல் சேவைகள் இத்துறையில் வேகமாகவரும். இது இந்தியாவை உலகின் முக்கியகாப்பீட்டு சந்தையாக மாற்றும்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |