S. I. R. உருப்படியான வேலையை முடித்திருக்கிறது

தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான வேலையை செய்து முடித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்பது தவறு. 97 லட்சம் பெயர்கள்தான் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, வாக்காளர் இல்லாமல் பெயர் மட்டும் பட்டியலில் இடம் பெற்றிருந்ததுதான் அந்த 97 லட்சம். அவை அப்படியே இருந்திருந்தால் கள்ள ஓட்டு போடவே பயன்பட்டிருக்கும். அது இப்போது தடுக்கப்பட்டுள்ளது.

முன் இருந்த பட்டியலில் இடம் பெற்ற பெயர்களுக்கு உரியவர்கள் உண்மையிலேயே குறிப்பிட்ட முகவரிகளில் இருக்கிறார்களா என்று சரி பார்ப்பது மட்டுமே S. I. R. ன் பணி. அது நடந்து முடிந்துள்ளது.

இறந்தவர்களின் பெயர்கள், முகவரி மாறிய பிறகும் பழைய முகவரியிலிருந்து நீக்கப்படாத பெயர்கள், நிரந்தரமாக வெளியேறிய பிறகும் நீக்கப்படாத பெயர்கள், கள்ள ஓட்டு போடுவதற்காகவே சேர்க்கப்பட்ட பெயர்கள்- S. I. R. க்கு பிந்தைய பட்டியலில் இருக்காது.

அப்பெயர்களுக்கு உரியவர்கள் வர முடியாது என்பதால் அவை தானாகவே நீங்கி விட்டன.

உண்மையான வாக்காளர்கள் சிலரும் தங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பாமல், அல்லது அக்கறையின்றி S. I. R. படிவத்தை திருப்பிக் கொடுக்காமல் தங்களிடமே வைத்திருந்தால், தொடர்பு இல்லாத காரணத்தால் அவர்கள் பெயர்களும் நீக்கப்பட்டு விட்டிருக்கும்.

அவர்கள் இப்போது உரிய ஆதாரங்களைக் காட்டி பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். அவகாசம் இருக்கிறது.

எனவே, ஆளே இல்லாமல் பெயர் மட்டும் பட்டியலில் இருந்த பழைய நிலை இப்போது மாற்றப்பட்டுள்ளது. இது நல்ல விஷயம். தேர்தல் உண்மையாக நடக்க இது உதவும்.

இப்பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது, தேர்தலுக்குப் பிறகு நீக்கலாமே என்றெல்லாம் குரல் கொடுத்தவர்களுக்கு நல்ல நோக்கம் இருக்க முடியாது. S. I. R. அதை முறியடித்துள்ளது.

கள்ள ஓட்டுகளுக்கு இடம் இல்லாமல் தேர்தல் நடத்துவது நமது ஜனநாயகத்தில் கஷ்டமான காரியம். எனினும் அதை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது தேர்தல் கமிஷன்.

பாராட்டுவோம்.

– துக்ளக் சத்யா

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...