இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெளிப்படையான வர்த்தகஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை முக்கிய இடம் பெற்றது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவின் இரண்டாவது பெரியவர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்நிலையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என பெயரிடப்பட்ட, பெரிதும் எதிர்பார்க்கபட்ட, வெளிப்படையான இந்த சுதந்திர வர்த்தகஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாக இணைந்து அறிவித்தது.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலாவான்டர் லெயன் ஆகிய இருவர் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தஒப்பந்தம் முடிவானது.
இந்த ஒப்பந்தம் இறுதியானபின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், தொழிலாளர் விரிவாக்க துறையில் இதனால் 60 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக கூடும் என்றார்.
அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது, வளர்ச்சி குறைந்தநாடு என்ற அடிப்படையில் வங்காளதேசத்திற்கு வரிவிதிப்பு இல்லை. அதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் 250 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளி வர்த்தகத்தில், வங்காளதேசம் 30 பில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பிலான வர்த்தகம் மேற்கொள்கிறது. அதனை அந்நாடு தன்வசம் பிடித்துவைத்து கொண்டது. ஜவுளி ஏற்றுமதியும் செய்கிறது என்றார்.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தபின்னர், 7 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 40 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் கோடி) என்ற அளவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி அடையும் .
ஐரோப்பிய யூனியன் 6.5 டிரில்லியன் டாலர் அளவுபொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில் இந்தியாவின் பங்குகுறைவு. தற்போது 1.5 சதவீதம் மட்டுமே ஐரோப்பாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. தற்போதைய ஒப்பந்தம்மூலம், புதிய துறைகளில் ஐரோப்பிய யூனியன் சந்தை திறந்துள்ளது. சேவைத்துறையில் இந்தியா வாய்ப்புகளை திறந்துள்ளது. 94 சதவீத கடலோர பொருட்கள் வரி இல்லாமல் ஏற்றுமதிசெய்யப்பட உள்ளது. ஜவுளி, ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், தளவாடங்கள் போன்ற இந்தியாவுக்கு அதிக தொழிலாளர் நலன்சார்ந்த துறைகளில் ஐரோப்பிய சந்தை முதல்நாளில் இருந்தே திறந்து இருக்கும்.
விளக்குகள் அல்லது பிற நுகர்வுபொருட்கள் என இருக்கட்டும், நமது ஏற்றுமதிகள் அனைத்தும் முதல் நாளில் இருந்தே வரி இல்லா நிலை ஏற்பட போகிறது. பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், ரயில்வே, விமான உதிரிபாகங்கள், தோல் மற்றும் காலணித்துறை ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. ஆட்டோ உதிரிபாகங்கள், ஒயின்கள், மதுபானங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சந்தைதிறந்து இருக்கும்.
இந்தியாவில் பெரும்பாலும் சிறிய அளவிலான மற்றும் குறைந்தவிலை கொண்ட வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் இணக்கமான புரிதலுக்கு வர முடிந்தது. சிறிய மற்றும் விலை குறைந்த ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் நலன்களை பாதுகாக்க முடிந்ததில் இந்திய தொழில்துறை மகிழ்ச்சி அடைகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்துறையையும் ஆதரிக்கும் என அவர் கூறினார்
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |