“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல”- காமேனி கொ*ல்லப்பட்டதற்கு இந்தியாவில் போராட்டம் நடத்திய முஸ்லீம்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர்.
மும்பையில் இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் மௌலானா ஹசன் அலி ரஜனி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, காமேனி கொல்லப்பட்டதற்காக இந்தியாவில் போராட்டம் நடத்திய முஸ்லீம்களை கடுமையாக சாடினார்.
இது பற்றி அவர் கூறும்போது:
இஸ்ரேல் தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தவர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாடும் அதன் சர்ச்சைகளை அதன் சொந்த நாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும், அவற்றை வேறு எங்கும் கொண்டு செல்லக்கூடாது.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை அவர் கடுமையாக விமர்சித்தார். “இன்று உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், அவை இந்தியாவாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, ஏனென்றால் இறந்து கொண்டிருப்பவர்கள் எங்கள் தலைவர்கள் அல்ல என்று அவர் போராட்டம் நடத்திய முஸ்லீம்களை கடுமையாக சாடினார்.
நாம் பிறந்த இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்குமாறு ரஜனி முல்லீம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். “அனைவரும் தங்கள் நாடுகளுக்கு விசுவாசமாக இருக்கவும், தங்கள் நாட்டின் விவகாரங்களை தங்கள் சொந்தத்துடன் மட்டுப்படுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று கூறினார். இவரின் கூற்று மிகச்சரியானது.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |