தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இம்மாதம் 8-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் அங்கு கூடியுள்ள பொதுமக்கள் இடையே அவர் உரையாற்றுகிறார். முன்னதாக சரோஜினி நகரில் கட்டப்படுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை ஒப்படைக்கிறார்.

இதனையடுத்து 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான தில்லி மெட்ரோ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், இரண்டு புதிய வழித்தடங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதில் மஜிலிஸ் பூங்கா – மெளஜ்பூர் – பாபர்பூர் இடையேயான 12.3 கி.மீ நீளமுள்ள இளஞ்சிவப்பு வழித்தடத்தையும் தீபாலிஜவுக் – மஜிலிஸ் பூங்காக இடையே 9.9 கி.மீ நீளமுள்ள மெஜந்தா நிற வழித்தடத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தப் புதிய வழித்தடங்கள் புராரி, ஜகத்பூர், வஜ்ஜிராபாத், கஜூரிகாஸ், பஜன்புரா, யமுனா விகார், மதுபன் சௌக், ஹைதர்பூர், பத்திலி, மூர், பலஸ்வா மற்றும் மஜ்ஜிலிஸ் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமையும்.

தில்லி மெட்ரோ ரயில் ஐந்தாம் கட்டப் பணிகளின் கீழ் 16.0 கி.மீ நீளமுள்ள 3 புதிய வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பொதுக் குடியிருப்பு மற்றும் மறு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 15,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இது சரோஜினி நகர், நேதாஜி நகர், கஸ்தூரிபாய் நகர் மற்றும் ஸ்ரீனிவாஸ்புரி போன்ற பல்வேறு முக்கியப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த பகுதிகளை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்குமான மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...