டீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும்

 டீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும் டீசல் மற்றும் சமையல் எரிவாயுக் கட்டணங்களின் கிடுகிடு உயர்வு அறிவிப்பு விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் வேளாண்மைத் துறை, டீசல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படும். நாடு முழுவதும் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையால்

லட்சக்கணக்கான விவசாயிகள் வயலுக்கு நீர்பாய்ச்ச டீசல் பம்புசெட்டுகளையே நம்பியுள்ளார்கள். இந்த ஐந்து ரூபாய் விலையுயர்வு என்பது முன்னுதாரணமில்லாதது. இந்த விலையுயர்வு டிராக்டர்கள் வாடகைக் கட்டணத்தையும் ஏற்றி, விவசாய மக்களுக்கு பெரும் சுமையையும் ஏற்படுத்திவிடும்

.  ஏற்கனவே வேளாண்மைத் தொழில் என்பது லாபமற்றதாக மாறிவருகிறது. ஏனெனில் வேளாண்மை இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் விவசாயத்தை விட்டு கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயரும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டீசல் விலையுயர்வு அறிவிப்பு, நாட்டின் வேளாண்மை சமூகத்தினரின் மீதான நேரடித் தாக்குதலாகும். இதனால் பொருட்களின் விலையுயர்வு மேலும் அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவுகள் மற்றும் கட்டணங்களின் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும். இது சாதாரண குடியானவனைக் கடுமையாகப் பாதிக்கும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சிலிண்டர்தான் கொடுக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு கீழ்நடுத்தர மற்றும் நடுத்தர மக்களை நேரடியாகப் பாதிப்பதாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர் சராசரித் தேவையாக உள்ளது. ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மேல் வாங்குபவருக்கு லெவிக் கட்டணமாக ஒரு சிலிண்டருக்கு 746 ரூபாய் விதித்திருப்பது குரூரமான நகைச்சுவையாகும். இது இந்நாட்டில் நடந்தேயிராத ஒன்றாகும். விலைவாசி உயர்வால் கடுமையாக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கை இது.

காங்கிரஸ் மக்களுக்கு இப்படி வாக்குறுதி அளித்த்து. “காங்கிரஸின் கை சாமானிய மனிதனோடு இணைந்திருக்கும்”. இதை இனி இப்படி மாற்றுவதே பொருத்தமாக இருக்கும்: “காங்கிரஸின் கை சாமானிய மனிதனின் முதுகில் குத்தும்” விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் நலத்தை முன்னிட்டு டீசல் விலை உயர்வு மற்றும் சிலிண்டர்கள் கட்டுப்பாடு என்ற இரண்டு முடிவுகளையும் அரசு வாபஸ் பெற வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், மக்களோடு நின்று கட்டண உயர்வை வாபஸ் பெறுவதற்கு வற்புறுத்துகிறார்களா அல்லது அதிகாரத்துக்காக்க் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசின் முடிவுகளை ஆதரிக்கப் போகிறார்களா என்பதைக் கண்டுகொள்ளும் சோதனை இது. வெறுமனே வாய் வார்த்தையாக்க் கோரிக்கைகளை விடுத்து, முதலைக் கண்ணீர் வடிப்பது மட்டும் போதாது. மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக தேசிய அளவில் போராட்டங்களை நடத்தும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...