பெங்களூர் பாஜக பேரணிக்கு சிறப்பு பாதுகாப்பு செய்யவேண்டும்

 பெங்களூருவில், மாநில பாஜக., சார்பில் அடுத்த மாதம், மாபெரும்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி உரையாற்றுகிறார். இதற்காக, சிறப்புபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என, மாநில அரசிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சிசெய்து வருகிறது. இதற்குமுன், ஆட்சியில் இருந்த, பாஜக ., உட்கட்சி பூசல்களால், மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. லோக்சபாதேர்தலை முன்னிட்டும், மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தவும், அடுத்தமாதம், 17ம் தேதி, பெங்களூரில், மாநில பா.ஜ., சார்பில், மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி உரையாற்றுகிறார். பீகாரில், நரேந்திரமோடி கலந்துகொண்ட கூட்டத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஆறுபேர் பலியாயினர்; 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல், மோடியை குறிவைத்தே நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாஜக .,வினர் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, ‘மோடி, பெங்களூருவில் பங்கேற்கும்பேரணிக்கு, பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும்’ என, ஆளும் அரசிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, பாஜக., செய்தித்தொடர்பாளர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: பீகார் குண்டு வெடிப்பு போல், மற்றொருசம்பவம் நடைபெற கூடாது. எனவே, பெங்களூருவில் நடைபெறவுள்ள பேரணிக்கு பலத்தபாதுகாப்பு அளிக்குமாறு, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். என்று ஜாவடேகர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...