பா ஜ கா, வின் சென்னை போராட்டம் இன்று நடைபெறுகிறது

கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி யாத்திரை நடத்தப்பட்டது.

31 மாவட்டங்களில் சுற்றுப் பயணம் நடத்தப்பட்டது. 1500 பொதுக் கூட்டங்கள் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து இருக்கிறோம். இவர்களுக்கு

இழைக்கப்படும் அநீதி பொது மக்களிடம் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தாமரை யாத்திரை இன்று (29-ந் தேதி) சென்னை வந்தடைகிறது.

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் சென்னை போராட்டம் என்ற பெயரில் மிகப் பெரிய போராட்டம் நடக்கிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் நிதின்கட்காரி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

இது தொடர்பாக தமிழக பா ஜ கா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;

இலங்கை கடற்படை கடந்த 10 நாட்களில் 2 தலித் மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மீனவர் உயிருக்கு ரூ.5 லட்சம் தான் விலை மதிப்பா? அடுத்த மாதம் 4-ந் தேதி சென்னை வரும் சுஷ்மா சுவராஜ் பலியான மீனவர் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்வார்.

மீனவர்களை தொடர்ந்து தாக்கினால் இலங்கை கடற்படையை தமிழக மீனவர்களே எதிர் கொள்ளும் சூழ்நிலை வரும். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்படுகிறது. வருகிற தேர்தலில் இதற்கு பாடம் புகட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இதற்கான முயற்சியை அ.தி. மு.க. மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது மாநில துணை தலைவர் நரேந்திரன், பொதுச் செயலாளர் மாலதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...