இனப் படுகொலையில், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப்பொறுப்பு உண்டு

 இலங்கை இனப் படுகொலையில், பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தார்மீகப்பொறுப்பு உண்டு இனப் படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீதபொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத தார்மீகபொறுப்பு உண்டு.என்று தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , இலங்கை தமிழர் விவகாரத்தில் பா.ஜ.க மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம்சுமத்தி உள்ளார். இது காலம்கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம்வழங்கினால் அது எப்படி இந்தியாவுக்கு எதிராகதிரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்குகொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீதுபாயும் என்பதை பாஜக. உணர்ந்து இருந்தது.

எனவேதான் இலங்கை அரசு ஆயுதம்கேட்டபோது தர மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுதபயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தரமறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டுமக்களுக்கு தெரியும்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு வெறும்நாடகம். இதனால் பயன்பெறபோவது ராஜபக்சே. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் காமன்வெல்த்மாநாட்டை எதிர்த்தது பா.ஜ.க.

இங்கிலாந்து பிரதமர் கேமரூனின் அடிப்படைதைரியம் கூட மன்மோகன்சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்தபிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு ராஜபக்சே 100 சதவீதபொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத தார்மீகபொறுப்பு உண்டு.

மத்திய அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்புண்டு என்பதை அவர் உணர வேண்டும். காலம்கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்கவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...