ஜம்முகாஷ்மீர் சட்டப் பேரவை காலத்தை 5 ஆண்டாக குறைக்க வேண்டும்

 ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள சட்டப் பேரவை காலம் 6 ஆண்டுகள் என்பதை, 5 ஆண்டாக குறைக்கவேண்டும் என்று பாஜக. தேசியசெயற்குழு உறுப்பினர் ஜிதேந்திரசிங் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார் .

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

மக்களவை தேர்தலுடன் ஜம்முகாஷ்மீரில் சட்டப் பேரவை தேர்தலை நடத்தும்விதமாக, மாநிலத்தில் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மாநாட்டுக்கட்சி-காங்கிரஸ் கூட்டணி, பேரவையில் சட்டம்கொண்டு வர வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவின் நன்மைகள்குறித்து நாடுமுழுவதும் விவாதம் எழுந்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் இணைந்து ஜம்முகாஷ்மீரில் சட்டப் பேரவை காலம் 6 ஆண்டுகள் என்பதை முடிவுக்கு கொண்டு வர இதுவே உகந்த தருணம்.

மாநிலத்தில் 370வது பிரிவு தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவை ஓர் உதாரணம். 1975 முதல் 1977 வரை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், அன்றையபிரதமர் இந்திராகாந்தி, மக்களவை தேர்தலை தள்ளிவைக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பில் (1976) 42 வது சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

ஜம்முகாஷ்மீரில் இருந்த ஷேக்அப்துல்லா தலைமையிலான அரசு மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை பின்பற்றி, 1977ஆம் ஆண்டு மாநிலத்தின் சட்டப் பேரவைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக மாற்றிக்கொண்டது.

சட்டப்பேரவை காலம் 6 ஆண்டுகளாக இருப்பதால் ஏற்பட்டுள்ளமுன்னேற்றங்கள் என்ன? 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டால் ஏற்படப் போகும் தடங்கல்கள் எவை? என்பதை தேசியமாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி விளக்கவேண்டும் என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.]

tags; ஜிதேந்திர சிங், பாஜக, bjp, demands, reduction, of jak, assembly-term, years

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...