தமிழகத்தில் மாற்றத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது என பா.ஜ.க மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; கடந்த 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இப்போது தான் மக்களவைத் தேர்தலுக்கு மகத்தானகூட்டணி அமைந்துள்ளது. நாடுமுழுவதும் இப்போது மோடி அலை வீசுகிறது. பா.ஜ.க.,வின் சின்னமான தாமரையை மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தால் வெற்றி என்ற நிலை இருக்கிறது.கடந்த 2009-இல் இப்போது பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகள் பெற்றவாக்குகளை சேர்த்தால் 25 சதவீதம், மோடி அலைக்காக 15 சதவீதம் ஆக மொத்தம் 40 சதவீத வாக்குகள்கிடைப்பது உறுதி. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று எனும் நிலையை பா.ஜ.க கூட்டணி உருவாக்கியுள்ளது. பாஜக மத்தியில் ஆண்ட 6 ஆண்டுகளில் 6.80 கோடிபேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. செயல்படாத பிரதமர் ஒருவர் 10 ஆண்டுகளாக அப்பதவியில் தொடர்கிறார். குஜராத்தை பொறுத்த வரையில் தினமும் மாலை 4 மணிக்குள் பெறப்படும் ஜாதி, வருமான சான்றிதழ்களின் விண்ணப்பங்கள்மீது அன்றே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை நாடுமுழுவதும் செயல்படுத்த வேண்டும்.
விவசாய மின் இணைப்புக்கு தமிழகத்தில் காத்திருக்கவேண்டும். ஆனால் குஜராத்தில் 24 மணி நேரத்துக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது என்றார் எச்.ராஜா.
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.