நாட்டின் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும்

 நாட்டின் பொருளாதாரம் விரைவில் நிலைப்படும், நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் எச். ராஜா கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது;

பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளம்வயதில் தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைத்துக் கொண்ட அமித்ஷா, குஜராத்தில் மோடி அரசுக்கு உறுதுணையாக இருந்தவர்.

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 5 புதிய ரயிவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்மிக சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் ராமேசுவரம்-ஹரிதுவார், மேல்மருவத்தூர்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிவிப்புகளை வரவேற்கிறோம்.

மக்களவைத் தேர்தலின்போது பாஜகவை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாகூட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வேயின் உண்மை நிலை தெரிவிக்கப்பட்டுள்ளது என பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சென்னை மெளலிவாக்கம் கட்டடவிபத்து குறித்து தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டும் வகையில் இருந்தாலும், அது போன்ற அடுக்குமாடி கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதியளித்த அதிகாரிகள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2003-04-இல் 8.8 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிர்வாகத் திறமின்மையால் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல அன்னிய செலாவணியும் வெகுவாக குறைந்துள்ளது.

எனினும், ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக மத்தியஅரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இது போல இந்தியாவின் பொருளதாரமும் விரைவில் நிலைப்படும் . அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...