கிரிக்கெட் கிளப்புகளுக்குள் மட்டும் தான் ஆடை கட்டுப்பாடுகளா?

 ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் முக்கால் நிர்வாணத்தில் நாகரிகமற்று இருந்தபொழுது வேட்டிகளும் அங்கவஷ்திரங்களும் அணிந்து நாகரிக பெருவாழ்வு வாழ்ந்தவர்கள் நாம். ஆனால் இன்றோ தாய் மண்ணிலேயே வேட்டி கட்டுவது அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. சில கிளப்புகளும் , நச்சத்திர ஹோட்டல்களும் வேட்டி கட்டியவர்களை உள்ளே விடவே மறுக்கிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்ககிளப்பில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரந்தாமன், மூத்த வழக்குரைஞர் ஆர். காந்தி உள்ளிட்டோர் வேட்டி கட்டி வந்தனர் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர்களை உள்ளே விடாமல் அவமதித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மட்டுமின்றி, ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிளப்களில் வேட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்டி அணிந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி கிடையாது என்று சட்டங்களே இயற்றியுள்ளனர்.

ஆங்கிலேயனின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு 65ந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் இன்னும் நாம் அவனது அநாகரிக எச்சங்களில் இருந்து விடுபடவில்லையே?. தாய் மண்ணிலேயே அதன் கலாச்சார அடையாளங்களை புறக்கணிக்கும் இதைப்போன்ற கிளப்புகள் தேவைதானா?.

மூடிய அரங்கத்துக்குள் மிகவும் நாகரிகமாக கோட் சூட் அணிந்து வரவேண்டும் என்று ஆடை கட்டுப்பாடுகளை (dress code) விதிக்கும் இந்த கிரிக்கெட் கிளப்புகள். கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் அரை குறை ஆடைகளுடன் பெண்களை ஆட அனுமதிப்பது மட்டும் ஏனோ?.

ஆடை வடிவில் மண்ணின் கலாச்சாரத்தை புறக்கணிப்பதால் பெரிதாக யாரும் கோட்டு சூட்டுக்கு மாறிவிடப்போவதில்லை. அதேநேரத்தில் விளையாட்டு வடிவத்தில் கிரிக்கெட்டை அந்நிய விளையாட்டு என்று மண்ணின் மைந்தர்கள் அனைவரும் புறக்கணித்தார்கள் என்றால் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு ஆடை கட்டுப்பாடுகளை விதிக்கும் தாய் மண்ணில் பிறந்து அன்னியவான்கள் எல்லாம் வேஸ்ட்டி எண்ண கோவணத்துக்கு கூட மாற தயங்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...