மோடியின் உரை தங்களது இதயங்களை தொட்டதாக நேபாள அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

 மோடியின் உரை தங்களது இதயங்களை தொட்டதாகவும் இதைப்போன்று இதுவரை எந்த அரசியல் தலைவரும் பேசியதில்லை என்றும் நேபாள அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது இரண்டுநாள் நேபாள பயணத்தை திங்கள்கிழமை நிறைவுசெய்தார். இந்தப் பயணத்தையொட்டி, நேபாளத்தில் முக்கியமான சாலைகள் அமைப்பதில் உதவுவது, எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பது என்று இந்தியா முடிவுசெய்துள்ளது.

மோடியின் பயணம்குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் சையது அக்பருதீன் கூறுகையில், “”நேபாள அரசியல் நிர்ணயச்சபையில் பிரதமர் மோடியின் உரை தங்களது இதயங்களையும் மனதையும் தொட்டதாக அந்நாட்டைச்சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அவரிடம் தெரிவித்தனர்.

இந்தப்பயணம் வரலாற்று சிறப்புமிக்கது என்று நேபாளத் தலைவர்கள் வர்ணித்தனர். மோடி பேசியதைப்போல் இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்தத்தலைவரும் இதுவரை பேசி தாங்கள் கேட்டதில்லை என்று கூறினர்” என்றார்.

“இந்தியாவுடனான 1950ம் ஆண்டைய நட்புறவு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என நேபாளம் கோரி வருகிறது. இதுகுறித்து மோடி கூறுகையில், இந்த கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பதாக அந்நாட்டுத் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்’ என்றும் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...