தூத்துக்குடியில் பாஜ வேட்பாளர் தாக்கப்பட்டார்

 தூத்துக்குடியில் வாக்குச் சாவடியை பார்வையிடச் சென்ற பாஜ வேட்பாளர் மற்றும் அவர் கணவரை அதிமுகவினர் தாக்கினர். மயங்கி விழுந்த பாஜ வேட்பாளர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 250 வாக்குச்சாவடிகளில் மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்தது. காலையில்

இருந்தே அதிமுகவினர் வாக்குச்சாவடிகளுக்குள்ளும், வெளியிலும் அத்துமீறி நடந்து கொள்வதாக பாஜவினர் புகார் தெரிவித்தனர். கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவில் உள்ள ஒரு பூத் அருகே மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மதுரைவீரனின் கார் நிறுத்தப்பட்டு, அதனருகே இருந்த சிலர் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்ததும் அதிமுகவினர் தங்களது காரை அங்கிருந்து எடுத்துசென்று 2வது தெருபகுதியில் நிறுத்தி பெட்ஷீட்டால் மூடி மறைத்துவைத்தனர். நேற்று மதியம் முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுகள் போடுவதாக தகவலறிந்த பாஜக வேட்பாளர் ஜெயலெட்சுமியும், அவரது கணவரான தென்மண்டல செயற்குழு உறுப்பினர் கனகராஜும் அங்கு சென்றனர். அப்போது பூத்திற்குள் இருந்த அதிமுகவினர் அவர்களை தாக்கியுள்ளனர். இதில் கனகராஜூக்கு கையில் அடி விழுந்தது. இதனையடுத்து தங்களை தாக்கிய அதிமுக நகரசெயலாளர் ஏசாதுரை தலைமையிலான அதிமுக.,வினரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜெயலட்சுமி,

அவரது கணவர் மற்றும் பாஜவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். வேட்பாளர் ஜெயலெட்சுமி தன்னை அதிமுக.,வினர் தாக்கிகொல்ல முயற்சிசெய்ததாக தெரிவித்தார். தன்னை தாக்கிய அதிமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிய அவர் 4 மணியளவில் மறியலில் இருந்தபோதே மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 108 ஆம்புலன்சுக்கு போன்செய்து வெகு நேரமாகியும் வராததால் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த ஜெயலெட்சுமியை அவரது கணவர் கனகராஜே தோளில் தூக்கிச்சென்று கார் மூலம் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவங்களினால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...