11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 நில எடுப்பு திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்து இருப்பதை வரவேற்கிறோம், என்று குற்றாலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு வந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பாராளுமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மக்கள் பாராட்டுகிறார்கள். இதில் சிறப்பம்சமாக காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒருவர் ஒரு மாதத்திற்கு ரூ.1 வீதம் 12 மாதங்களுக்கு செலுத்தினால் விபத்து நஷ்டஈடு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. ரூ.330–க்கு ஆயுள் காப்பீடு பெறலாம். அமைப்பு சாரா கூலி தொழிலாளர்களுக்கு ரூ.1000 பென்சன் வழங்கப்படுகிறது.

பா.ஜனதா அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது என்று கூறுவது தவறு. ரூ.1 கோடிக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 2 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.9 ஆயிரத்து 800 கோடி அரசுக்கு கிடைத்துள்ளது. ராஜ்ய சபாவை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் செயல்படுகின்றன.

நாடு முழுவதும் 400 நீர் மற்றும் மின்திட்டங்கள் நில பிரச்சினையால் செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. நில எடுப்பு திட்டம் மூலம் தான் இதனை செயல்படுத்த முடியும். இந்த திட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு 10 மில்லியன் டாலர் வழங்கி உள்ளது. இதன்மூலம் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் 21 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.

திருமணம் ஆகும் போது தாலி கட்டுவது, தமிழர்களின் கலாசாரம். பல மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு இது இல்லை என்பதற்காக நாம் விட்டுவிட முடியாது. விவாதம் என்ற பெயரில் இந்துக்களை இழிவுபடுத்துவதை நாம் ஏற்று கொள்ள முடியாது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும்.

ஒவ்வொரு பூத்திற்கும் 100 வாக்காளர்கள் வீதம் பாரதீய ஜனதாவில் மார்ச் மாத இறுதிக்குள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தான் இங்கு வந்துள்ளோம். தமிழகத்தில் ஒ.பன்னீர் செல்வம் தலைமையிலான ஆட்சியில் வேகம் இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முதல்–அமைச்சர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். யார் வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியே போகலாம். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி மசூதிகள் குறித்து கூறியது அவரது சொந்த கருத்து. அது பா.ஜ.க கருத்தல்ல. மத்திய அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக உள்ளது என்பது கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியினரும் கிளப்பிவிட்ட வீண் வதந்தியாகும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...