இறைவன் முன்பு அனைவரும் சமம்

 திருவாரூருக்கு அருகில் எமர்பேரூர் என்ற ஊரில் சிறந்த சிவபக்தரான நமிநந்தி அடிகள் வந்தார். அவரது ஊருக்கு அருகிலுள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராஜர் எழுந்தருளி வீதிவலம் வருவார்.இப்படித்தான் திருவிழாவில் தியாகராஜரைத் தரிசிக்க நமிநந்தி அடிகள் சென்றார். பக்தியோடு இறைவனை வணங்கி வீடு திரும்பினார்.
திருவிழாக் கூட்டத்தில் பல ஜாதி மக்களுடன் கலந்து நின்றதால், தீட்டு ஏற்பட்டுவிட்டது என எண்ணி, மறுநாள் காலையில் குளித்துவிட்டு வீட்டிற்குள் நுழையலாம் எனக் கருதி, வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கிவிட்டார்.

அப்போது இறைவன் அவரது கனவிலே தோன்றி, “அன்பனே! என்னைத் தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவரும் தூய்மையானவர்களே. அவர்களில் உயர்வு தாழ்வு பார்த்து தீட்டு ஏற்பட்டுவிட்டது என்று நீ நினைப்பது தவறு” என்று கூறி மறைத்தார்.

கண் விழித்த நமிநந்தி அடிகள் செய்த தவறை எண்ணி வருந்தினார். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்ந்த அவர், எழுந்து வீட்டில் உள்ளே சென்று பூஜையில் அமர்ந்தார்.

– நமிநந்தி அடிகள் 63 நாயன்மார்களில் ஒருவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...