இது முன்னரே திட்டமிட்டதாக்குதல்

 காரைக்குடியில் பா.ஜ., தேசியசெயலாளர் எச்.ராஜா வீட்டின் மீது நேற்று இரவு, பெட்ரோல் குண்டுடை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

காரைக்குடி சுப்பிரமணிய புரம் 10-வது வீதியில் எச்.ராஜா வீடு உள்ளது. அவர் சென்னையில் இருப்பதால், அவரது தம்பி பாஸ்கர் குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். ராஜா, காரைக்குடி வந்தால் கட்சி பணிகளை இந்த வீட்டில் இருந்து கவனிப்பார்.

இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நேற்று இரவு 10.30 மணிக்கு, வைரவபுரம் பகுதியில் இருந்து வந்த இருவர் பெட்ரோல்குண்டை வீசி இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். சப்தம்கேட்டு வந்த போலீசார் தீயை அணைத்தனர்.

இது குறித்து டி.எஸ்.பி., முத்தமிழ் விசாரிக்கிறார்.எச்.ராஜாவின் தம்பி மனைவி ஜானகி கூறுகையில், ''இரண்டு நாட்களாக இப்பகுதியில் தெரு விளக்கு எரியவில்லை. வீட்டுக்கு வெளியில் உள்ள மின் விளக்கை அணைத்து விட்டு அப்போதுதான் உள்ளே சென்றேன். திடீரென வெடிக்கும் சப்தம்கேட்டது. போலீசார் தீயை அணைத்து கொண்டிருந்தனர்,'' என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்கு முன், கண்டனுாரில் உள்ள எச்.ராஜாவின் தோட்டத்திற்கு அரிவாளுடன் சென்ற நபர்கள், காவலாளியை மிரட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக எச்.ராஜா கூறியதாவது; காலைதான் சென்னைக்கு வந்துள்ளேன். நான் அங்கிருப்பதாக அனுமானம் செய்துகொண்டு குண்டு வீசியிருக்கலாம். இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளேன். இது முன்னரே திட்டமிட்டதாக்குதல் சம்பவம் என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று தி ...

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டம் நாடு தழுவிய வெற்றி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, புதுதில்லியில் உள்ள புத்த ஜெயந்தி ...

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ...

மேக் இன்  இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ர ...

ரூ 130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...