உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பங்கார்மாவு தொகுதி எம்எல்ஏ குல்தீப்சிங் செங்காரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது .
கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தைச்சேர்ந்த பங்கார்மாவு தொகுதி எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டுஎழுந்தது .
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீஸார் குல்தீப்பை கைதுசெய்தனர். இது நாட்டில் மிகப் பெரும் விவாத்தத்தை எழுப்பி பேசு பொருளானது.அதன் பின்னர் பாஜக விலிருந்து சஸ்பெஸ்ண்ட் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் , வழக்கறிஞர்களுடன் ஒருவாகனத்தில் ரேபாரேலியில் உள்ள உறவினர்களைச் சந்திக்கச்சென்ற சமயத்தில் வேகனமாக வந்த ஒருலாரி அவர்களின் காரின் மீது மோதியது.
இந்த கோரவிபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமி படுகாயம் அடைந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது தீவிரசிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத்தொடர்ந்து சிறுமி மீதான பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குககள் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மிது சிபிஐ வழக்குப்பகுதி செய்தனர். சிறுமியின் பாலியல்விவகாரம் பார்லிமெண்டிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர்க் கட்சிகள் தரப்பில் இருந்து பாஜகவுக்கு அழுத்தம் தரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்க பட்டன.
இந்நிலையில் சிறுமியை பலாத்தாகாரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பங்கார்மாவு தொகுதி எம்எல்ஏ குல்தீப்சிங் செங்காரை தற்போது பாஜக தலைமை கட்சியைவிட்டு நீக்கி உத்தரவிடுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.