ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும். அப்படி சேகரிக்கும் சிறுநீரிலிருந்து யூரியா எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது சுவீடன் அறிவியல் ஆய்வாளர்கள் மனிதர்களின் சிறு நீரை பரிசோதனை செய்ததில் அதில் நைட்ரஜன் சத்துக்கள் அதிகமாக இருப்பதாககூறியுள்ளனர்.
சிறு நீரில் நைட்ரஜன் சத்துக்கள் இருப்பதால் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களுக்கு பதிலாக இதனை பயன் படுத்தலாம்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் யூரியா லாபகரமான நடவடிக்கையாக இருக்கும். யூரியா உற்பத்திக்காக செலவழிப்பது பொருளாதார ரீதியாக பயன்தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.