அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக முஸ்லிம்கள் இந்துக்களுடன் கைகோக்க வேண்டும். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு “வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அயோத்தியில் ராமர் கோயில்கட்ட இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும், இதனால் மதச் சார்பின்மை மற்றும் மத சகோதரத்துவத்திற்கு ஒரு உதாரணமாக இந்தியா இருக்கும்.
கோயிலில் பயன்படுத்த ஒரு தங்கசெங்கலை வழங்குவது என்ற எனது முந்தைய வாக்குறுதியில் இப்போதும், உறுதியாக இருக்கிறேன், .கோயிலுக்கு அடித்தளம் அமைக்கும் போது, நான் செங்கலை பிரதமரிடம் ஒப்படைப்பேன்.
என்று கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் இளவரசர் யாகூப் ஹபீபு தீன் துசி கூறினார்.