தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தைரியமிருந்தால் தனி ஈழத்திற்காக டில்லியில் உண்ணா விரதம் இருக்கட்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களுக்கு தந்த பேட்டியில்; தி.மு.க. தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் எதிர்க் கட்சியாக
இருக்கிறாரோ அப்போதெல்லாம் தனி ஈழம் பற்றி பேசுவார் என குற்றம் சாற்றிய ராமதாஸ், 18 எம்பி.க்களை வைத்திருக்கும் கருணாநிதிக்கு , துணிச்சல் இருந்தால் தனிஈழம் வேண்டும் என டில்லியில் உண்ணா விரதம் இருக்கட்டும் என்றார்.