இந்தோ-சீன எல்லைவழியாக இந்தியாவிற்குள் சீனர்களின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் மாநில பா.ஜ.க குற்றம் சுமத்தியுள்ளது .
இது குறித்து மேலும் அது தெரிவித்ததாவது , ‘இந்தோ-சீன
எல்லைபுறம் வழியாக சீனர்களின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்து ள்ளது. கடந்த ஒருவருடத்தில் மட்டும் இந்தோ-சீன சர்வதேச எல்லை பகுதியை ஆக்கிரமிக்க நூற்றுக்கும் அதிகமான முறை சீன படையினர் முயன்றுள்ளனர்’ என்றார்.