நரேந்திரமோடி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்

தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

பிரதமர் நரேந்திரமோடி, வாங் யீ இடையேயான சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனைநடத்தினர். அப்போது சீனாவில் வரும் செப்டம்பர்மாதம் நடைபெற இருக்கும் ஜி-20 அமைப்பின்மாநாடு குறித்து வாங் யீ தெரிவித்தார். இதற்கு சீன அதிபருக்கு தனது வாழ்த்துகளை தெரிவிக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, சுஷ்மா ஸ்வராஜை வாங் யீ சந்தித்துப்பேசினார். 3 மணிநேரம் வரை நீடித்த இந்தச்சந்திப்பில், என்எஸ்ஜி விவகாரம், மசூத் அஸாத் விவகாரம் ஆகியவற்றை சுஷ்மா ஸ்வராஜ் எழுப்பினார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா மேற்கொண்டுவரும் பொருளாதார முனைய பணிகளுக்கு இந்தியாவின் கவலையை சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.

மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், சீனாவுடன் எத்தகைய தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் பேசத்தயாராக இருப்பதாக வாங்யீயிடம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளில் பல்வேறு அம்சங்கள் குறித்து வெளியுறவுச்செயலர்கள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தும் புதிய நடைமுறையை கடைப்பிடிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தச்சந்திப்பின்போது, தென் சீனக்கடல் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு விவகாரங்கள், உலகஅரசியல் நிலவரம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும் அமைந்திருந்தது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...