ராகுல் காந்தி மிகப்பெரிய கோமாளி

ராகுல்காந்தி மிகப்பெரிய கோமாளி என்பது நாட்டுக்கே தெரியும், எங்களை பாஜக.,வுடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் கடுமையாக விமர்சித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரியசமிதி கட்சி தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். இந்த ஆண்டு மேமாதம் வரை ஆட்சி இருக்கும் போது, முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் சந்திர சேகர் ராவ் தீர்மானித்தார்.

 

இதையடுத்து, இன்று கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானத்தை ஆளுநர் இ.எல். நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர் ராவ் அளித்தார்.

இன்னும் தேர்தல் குறித்த தேர்தல் ஆணையம் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், 105 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று அறிவித்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் 6-ம்தேதி பிரதமர் மோடியை முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி கோரப்பட்டது அன்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசியல் நோக்கர்கள், தெலங்கானாவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து செயல்பட சந்திர சேகர் ராவ் கூட்டணி குறித்துப் பேசிவிட்டார் என்று செய்திகள் வலம் வந்தன. அதற்கு ஏற்றார் போல் அந்தச் சந்திப்புக்குப் பின் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்காமல் சந்திரசேகர் ராவ் இணக்கம் காட்டி வந்தார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பாஜகவும், டிஆர்எஸ் கட்சியும் இணைந்து தேர்தலைச்சந்திக்குமா என்று கேட்டனர், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியும் விமர்சித்து வருவதைக் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

தெலங்கானா மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சி தான் மிகப்பெரிய எதிரி. அடிப்படையில்லாத, ஆதாரமில்லாத, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத குற்றச் சாட்டுகளைத்தான் எங்கள் மீது காங்கிரஸ்கூறுகிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய கோமாளி யாரென்றால், அது ராகுல் காந்தி என்று அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்ததையும், பின்னர் தனதுஇருக்கையில் அமர்ந்து கண்ணடித்ததையும் அனைவரும் அறிவார்கள். ராகுல்காந்தி தெலங்கானாவுக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தால்தான் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கும்.

காங்கிரஸ் என்ற சுல்தானின் இளவரசராக ராகுல் காந்தி இருந்துவருகிறார். அதனால்தான் கூறுகிறேன்,

இனிவரும் காலங்களி ல் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் யாரும் டெல்லிக்கு அடிமையாக இருக்கக்கூடாது.

தெலங்கானாவுக்கு தேவையான விஷயங்களை தெலங்கானா மக்களே முடிவு செய்வார்கள். வரும் தேர்தலில் நாங்கள் தனித்துத்தான் போட்டியிடப் போகிறோம். ஒருவேளை எம்ஐஎம் கட்சி வந்தால் வரவேற்போம். எங்களின் நண்பர்கள்தான்.

இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...