ராகுல் நீரவ் மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா?

பஞ்சாப் நேஷனல்வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடிசெய்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் வைர வியாபாரி நீரவ்மோடியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள ஹோட்டலில் பேசி கொண்டிருந்ததை தாம் பார்த்ததாக சமூக ஆர்வலர் ஷெஜாத் புனாவாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் வியாழக் கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, தில்லி ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் நீரவ்மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா? என்று ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். அந்த ஹோட்டலில் ராகுல் நீண்டநேரம் இருந்தார்.


அந்த காலக்கட்டத்தில்தான், நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு கடன்கள் அளிக்கப்பட்டன. சிறப்பு பாதுகாப்பு படையினரிடம் இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கலாம் அல்லது உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தலாமா?


குரான் மீது ஆணையிட்டு இதை நான்தெரிவிக்கிறேன். நான் தெரிவிப்பது உண்மை என்பதை நிரூபிக்க உண்மைக் கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன் என்று அந்தப்பதிவுகளில் புனாவாலா குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இதே தகவலை புனாவாலா மீண்டும் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், நான் தெரிவிப்பதை பொய் என நிரூபித்தால், அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன்' என்றார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...