ஜிஎஸ்டி.,யை 5 சதவீதமாக குறைப்பேன்

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார். தனது பிரசாரத்தின் போது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி. (சரக்கு, சேவை வரி) 5 சதவீதமாக குறைக்கபடும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கோவைதொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்தொகுதியில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த சிலநாள்களாக நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

புலியகுளம் விநாயகர் கோயிலில் சுவாமிதரிசனம் செய்துவிட்டு, சிங்காநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வார்டு எண் 37, 38, 39, 40, 53, 55 ஆகியவற்றில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து மாலையில் 58 முதல் 63 வரையிலான வார்டுகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, இந்தத்தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்.

தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றால் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். கோவையின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதிகள் செய்து கொடுக்கப்படும். கோவைக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படும்.

மேலும் 18 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி., 5 சதவீதமாகக் குறைக்கப்படும். மோடியின் முதல்கையெழுத்தே ஜி.எஸ்.டி. குறைப்புக்காகத்தான் இருக்கும். அதிமுக, பாஜக போன்றகட்சிகள் செய்த திட்டங்களை தாங்கள் செய்ததாக எதிர்க்கட்சிகள்கூறி வருகின்றன. மேலும், மாநிலத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுப்போம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...