திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சில இடங்களில் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக பெரும்பான்மையான மக்கள் இந்த திருத்தபட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவுதெரிவித்து இருந்தாலும் சிறுபான்மையினர் இடையே பரப்பப் படும் தவறான தகவல்களால் ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இப்படி ஒருதருணத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த ஒரு பேட்டியில்,

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடுதான். இங்கு கிறிஸ்தவர். இந்து. இஸ்லாமியர்கள் அனைவரும் சரிசமமாகதான் இருக்கிறார்கள். இங்கு.. இப்பொழுது கேள்வி எழுப்பும் திமுக மற்றும் காங்கிரஸ் ….பாகிஸ்தானில் ஒரு இந்துநபர் நெற்றியில் குங்குமத்தை வைத்துக்கொண்டு நடமாட முடியுமா? முடியாது அல்லவா ? இந்த கேள்விகளை அங்கு சென்று கேட்கலாமே….

இங்கு அமர்ந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் பேசுவதுபோல் இங்கிருந்து பேசிக்கொண்டு உள்ளார்கள். அங்குசென்று கேட்க முடியவில்லை. ஆனால் மதசார்பற்ற நாடான இந்தியாவில் இருந்துகொண்டு சிறுபான்மையினரின் ஓட்டுவங்கியை பெறுவதற்காக ஒட்டுமொத்த பெரும்பான்மை மக்களையும் வாட்டிவதைக்க முற்படுகின்ற திமுகவும் காங்கிரசும். உலக நாடுகளுக்கு எதிரான கட்சி என தெரிவித்துள்ளார்.

“மோடி” எங்கள் நண்பர்; சகோதரர்; பாஜக எங்கள் உறவு என தெரிவித்துக் கொண்டு பாஜக உடனான உறவு நீடிக்கும் என்றும் தமிழகத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக 39 இடங்களை பெற்றாலும் அவர்கள் அனைவரும் டெல்லியில் சென்று என்ன செய்து கொண்டிருக் கிறார்கள்? பரோட்டா தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் என்னவாயிற்று? ஒன்றுமில்லை…. மோடி மிகவும் தெம்ப்பாக இருக்கிறார்.சொல்லப் போனால் அவரை கண்டு தான் உலக நாடுகளே பயப்படுகிறது.