“பாகிஸ்தான் வாழ்க” என கோஷம் எழுப்பிய அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்புஇருப்பது நிரூபணம் செய்யபட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச்சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெங்களூருவில் பேரணி நடைபெற்றது. இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் ஓவைசி கலந்துகொண்டார். அவர் மேடையில் அமர்ந்திருக்கும்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய அமுல்யா என்ற பெண் “பாகிஸ்தான் வாழ்க” என கோஷமிட்டார்.
இதுமிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தபெண்ணை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்தபெண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையயடுத்து அமுல்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “அமுல்யாவுக்கு ஆதரவு அளிக்கமாட்டேன் என்று அவரது தந்தையே கூறிவிட்டார். அமுல்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. நக்சல் அமைப்புடன் அமுல்யாவுக்கு தொடர்பு இருப்பது தற்போது உறுதி செய்ய பட்டுள்ளது. அவருக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என கூறினார்.
முன்னதாக இஸ்லாமிய அமைப்புகள் தனது மகளை தவறாக வழிநடத்துவதாக அமுல்யாவின் தந்தை குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |