அஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்

அஜ்மீர்தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் (மக்பரா)ஆகும். இவர் கரீப்நவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த அடக்கத்தலம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அஜ்மீர் தர்காவில் வருடந் தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக் கூடு விழா நடைபெறும். கரீப் நவாஸ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி நேற்று  புனித போர்வையை அஜ்மீர் தர்காவிடம்  வழங்கினார். இது 808வது உருஸ்விழாவாகும்.  பிரதமர் புனிதபோர்வை வழங்கும் புகைப்படைத்தை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வின்போது மத்திய சிறுபான்மையினர் நலன்  அமைச்சர்  முக்தார் அப்பாஸ்நக்வி உடன் இருந்தார்.

இந்தவிழாவிற்கு வழக்கமாக தலைவர்கள் புனிதபோர்வையை வழங்குவது வழக்கம்.  2015 ஆம் ஆண்டில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா புனிதபோர்வையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  காஜாமுகையதீன் சிஷ்தி (1141 – 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபிஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்திய துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தபட்டது. பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர். இவர்வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தி யாக்கள் எனப்படுகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...