தமிழகத்தில் வெகுநாட்களாக பாஜக.,வினர் மட்டுமல்லாது, ஊடகங்களும் தங்கள் ஊகங்களால் இவர் தலைவர், அவர் தலைவர் என்று தாங்களே தலைவரை அறிவித்து கொண்டிருந்த நிலையில்… எவர் ஊகத்திலும் இல்லாத ஒரு வரை தலைவர் என்று அறிவித்தது பாஜக., தலைமை!
அதுபோல், நேற்று, தெலங்காணா மாநில பிஜேபிக்கு புதியதலைவரை அறிவித்தது தலைமையகம். தெலங்காணா பிஜேபி தலைவராக கரீம்நகர் எம்பி பண்டி சஞ்சய் குமார் என்பவரை நியமித்துள்ளது.
இளைஞர்களிடம் நல்லபிடிப்பு உள்ள பண்டி சஞ்சய்க்கு பிஜேபி தலைமையகத்தோடு கூட ஆர்எஸ்எஸ் உடனும் நல்லதொடர்பு உள்ளது. 2018 நவம்பரில் நடந்த தெலங்காணா அசம்பிளி தேர்தலில் தோல்வியுற்றார். இவர் 2019 ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிபெற்றார்.
‘முன்னூரு காப்பு’ இனத்தைச்சேர்ந்த பண்டி சஞ்சய் அவருடைய தொகுதியில் மட்டுமின்றி தெலங்காணா முழுவதும் சிறப்பாக அறியப்படுபவர்!
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |