ஊரடங்கு நீடிக்கப் படலாம்

பிரதமர் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிகிறது. ஆனாலும் நோய்தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீடிக்கப் படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

இதுசம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்தலோசித்து விட்டு நாளை முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா நோயை கட்டுப் படுத்துவது தொடர்பாக 12 மருத்துவ நிபுணர்கள் கொண்டகுழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

சமுதாய நோய்பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் டி.சி.எஸ். ரெட்டி உள்ளிட்டவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். நோய் கண்டறிதல் நிபுணர்கள், வைராலஜிஸ்டுகள், தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் ஆகியோரும் இதில் இடம் பெற்றிக்கிறார்கள்.

எய்ம்ஸ், உலக சுகாதார நிறுவனம், இந்தியமருத்துவ கவுன்சில் பிரதிநிதிகளும் இதில் இருக்கிறார்கள். அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வுசெய்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

ஊரடங்கை தளர்த்தலாமா? என்பதுகுறித்து பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.இந்தவாரம் இறுதியில் (நாளை) அறிக்கை அளிக்கப்படும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதுசம்பந்தமாக அந்தகுழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறும்போது, நாங்கள் மருத்துவ ரீதியாக மட்டும் ஊரடங்கு கட்டுப் பாடுகளை தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசனை வழங்குவோம். இதனுடன் பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளையும் ஆராய்ந்து மத்திய அரசு உரியமுடிவுகளை எடுக்கும் என்று கூறினார்.

மேலும் மருத்துவ குழுவினர் நோய்பாதிப்பு ரீதியாக 4 மண்டலமாக பிரித்துள்ளனர். அதாவது 10 லட்சம்மக்கள் வசிக்கும் பகுதியில் 5 பேருக்கும் குறைவாக நோயாளிகள் இருந்து கடந்த ஒருவாரமாக நோய் பரவுதல் முற்றிலும் இல்லை என்றால் அது 1-வது மண்டலமாகவும், 10 லட்சம் மக்களில் ஒருவருக்கு மட்டுமே நோய் இருந்தால் அது 2-வது மண்டலமாகவும், 10 லட்சம் மக்களில் 1-லிருந்து 2 பேருக்கு நோய் இருந்தால் அது 3-வது மண்டலமாகவும், 10 லட்சம் பேரில் 2-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் இருந்தால் அது 4-வது மண்டலமாகவும் பிரிக்கப்படுகிறது.இதில் 1-வது மண்டலத்தில் மட்டும் ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்த குழு சிபாரிசு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது, 4-வது மண்டலங்களுக்கு கட்டுப் பாடுகளை தொடர்ந்து நீடிக்க சிபாரிசு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போல 2-வது மண்டலத்திற்கு ஓரளவு கட்டுப் பாடுகளை தளர்த்து வதற்கும் சிபாரிசு செய்யலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்தகுழுவின் அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் நாளை முடிவுகளை எடுத்து ஊரடங்கு தொடர்பாக அறிவிக்க உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.