கல்வானில் நடந்தது, சீனாவால் முன்னரே திட்டமிடப்பட்டது

லடாக்கின் கல்வான் பகுதியில் சீனாவின் தாக்குதலால் இருதரப்பு உறவுகளே பாதிக்கப் படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம், தொலைபேசியில் பேசியபோது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்தியவீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததpனர். சீனதரப்பில் 43 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இரு நட்டை சேர்ந்த அமைச்சர்கள் தொலை பேசியில் பேசி கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

தொலைபேசியில் பேசிய, வாங் யீ ” எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கோபமூட்டும் வகையில், எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என ராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற மோதல் மீண்டும் நடைபெறாததை இந்தியா உறுதி செய்ய வேண்டும். தற்போதையசூழலை இந்தியா தவறாக கணிக்கக்கூடாது. அந்தபகுதியின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற சீனாவின் உறுதியை குறைத்து மதிப்பிடக்கூடாது” என தெரிவித்தார்.

ஜெய்சங்கர் பேசியது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கல்வானில் நடந்தது, சீனாவால்முன்னரே திட்டமிடப்பட்டது. இதற்கான பின்விளைவுகளுக்கு அந்நாடே பொறுப்பேற்க வேண்டும். இந்தநிகழ்வுகள், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சீனா தனது நடவடிக்கையை ஆய்வுசெய்து ஆய்வு செய்வதுடன், சரியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜூன் 6 ம் தேதி, இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் முடிவை இரு தரப்பினரும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்த வேண்டும்.

இருதரப்பு ஒப்பந்தங்களை இரு நாட்டு ராணுவங்களும் கடைபிடிக்கவேண்டும். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை முறையாக மதிக்கவேண்டும். தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்ட முடிவை புரிந்துகொண்டு, சூழ்நிலையை பொறுப்பான முறையில் கையாள வேண்டும். இருதரப்பு ஒப்பந்தப்படி அமைதியை சீர்குலைக்கவும், பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருநாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

ஏற்கெனவே உயர்மட்டளவில் மேற்கொண்ட உடன்படிக்கையை சீனா கடைப்பிடித்திருந்தால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...