கல்வானில் நடந்தது, சீனாவால் முன்னரே திட்டமிடப்பட்டது

லடாக்கின் கல்வான் பகுதியில் சீனாவின் தாக்குதலால் இருதரப்பு உறவுகளே பாதிக்கப் படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம், தொலைபேசியில் பேசியபோது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்தியவீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததpனர். சீனதரப்பில் 43 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இரு நட்டை சேர்ந்த அமைச்சர்கள் தொலை பேசியில் பேசி கொள்வது இதுதான் முதல் முறையாகும்.

தொலைபேசியில் பேசிய, வாங் யீ ” எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கோபமூட்டும் வகையில், எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என ராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற மோதல் மீண்டும் நடைபெறாததை இந்தியா உறுதி செய்ய வேண்டும். தற்போதையசூழலை இந்தியா தவறாக கணிக்கக்கூடாது. அந்தபகுதியின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற சீனாவின் உறுதியை குறைத்து மதிப்பிடக்கூடாது” என தெரிவித்தார்.

ஜெய்சங்கர் பேசியது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கல்வானில் நடந்தது, சீனாவால்முன்னரே திட்டமிடப்பட்டது. இதற்கான பின்விளைவுகளுக்கு அந்நாடே பொறுப்பேற்க வேண்டும். இந்தநிகழ்வுகள், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சீனா தனது நடவடிக்கையை ஆய்வுசெய்து ஆய்வு செய்வதுடன், சரியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜூன் 6 ம் தேதி, இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் முடிவை இரு தரப்பினரும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்த வேண்டும்.

இருதரப்பு ஒப்பந்தங்களை இரு நாட்டு ராணுவங்களும் கடைபிடிக்கவேண்டும். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை முறையாக மதிக்கவேண்டும். தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்ட முடிவை புரிந்துகொண்டு, சூழ்நிலையை பொறுப்பான முறையில் கையாள வேண்டும். இருதரப்பு ஒப்பந்தப்படி அமைதியை சீர்குலைக்கவும், பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருநாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

ஏற்கெனவே உயர்மட்டளவில் மேற்கொண்ட உடன்படிக்கையை சீனா கடைப்பிடித்திருந்தால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...