காஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை

காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்டதலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்ல ப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

தங்களது வீட்டுக்கு அருகில் நடத்திவரும் சொந்த கடை ஒன்றில் இவர்கள் மூவரும் நேற்று மாலை இருந்தபோது இந்ததாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரியை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதாக காஷ்மீர் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வாசிம் பாரி, அவரது தந்தை பஷீர்அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் காயமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூவரும் துரதிருஷ்வடமாக இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோதி விசாரித்ததாகவும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஜிதேந்திர சிங் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

காஷ்மீரில் தேசிய வாதத்தின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்ததாக்குதல் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜகவின் ஜம்மு, காஷ்மீருக்கான செய்திதொடர்பாளரான அனில் குப்தா, “இதுபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரில் எங்களது குரலை மட்டுப் படுத்தாது. கடந்த மூன்றாண்டுகளாக வாசிம் பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்துவந்தார். மிகவும் சுறுசுறுப்பான தொண்டரான அவர், சமூகசேவைகளையும் செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது நாங்கள் அதிர்ந்து விட்டோம். தங்களுக்கு சொந்தமான கடையில் அவர்கள் இருந்தபோது, அங்குவந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர்” என்று அவர் தெரிவித்தார்.

“இது காஷ்மீரில் தேசியவாதகுரலை அடக்குவதற்கான தெளிவான செய்தி. ஒரு மாதத்திற்கு முன்புதான், ஒருபயங்கரவாத அமைப்பு பாஜக தொண்டர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, “இது கட்சிக்கு மிகபெரிய இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்; முழு கட்சியும் துயரமடைந்த குடும்பத்துடன் நிற்கிறது. அவர்களின் தியாகம்வீணாகாது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகளும் இந்தசம்பவத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டித்துள்ளன.

“பாஜக தொண்டர் மற்றும் அவரது தந்தைமீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். துயரத்தில் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல்வாதிகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்துவருவது வருத்தமளிக்கிறது” என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உயிரிழந்த பாஜக தலைவரின் எட்டுபாதுகாப்பு காவலர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில், தாக்குதல் நடந்த நேரத்தில் இறந்தவர்களுடன் பாதுகாப்பு காவலர்கள் யாரும்இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தாக்குதல் தொடுத்தவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...