கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி

விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் அரசாக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நெல்லியில், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியின் 17-வது தவணையை விடுவிக்கும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் (ஸ்பிரேயர்), நேரடி நெல் விதைப்பு இயந்திரங்கள், தேனி வளர்ப்பு பெட்டிகள் ஆகிய வற்றையும் அமைச்சர் எல் முருகன் வழங்கினார். மேலும் விவசாய துணை விரிவாக்க பெண் பணியாளர்களுக்கான (வேளாண் தோழி) சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

விவசாயிகள் அமைத்திருந்த இயற்கை விவசாய பொருட்கள் கண்காட்சி அரங்குகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின்பு நடைபெறும் முதல் நிகழ்ச்சி விவசாயிகளின் மேம்பாட்டுக்கானது என்றார். இன்று பிரதமர் விடுவித்துள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, நாட்டிலுள்ள 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை நேரடியாக சென்றடையும்  என்றும், இந்த நிதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அவர்கள் விவசாய இடுபொருட்களுக்காக கடன் வாங்குவதை குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார். மத்திய அரசு நாட்டில் உள்ள நான்கு பிரிவினர் குறிப்பாக மகளிர், விவசாயிகள், இளைஞர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தரம் உயர்த்தி விற்பதன் மூலம் அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் மூலம் நாட்டில் மூன்று லட்சம் பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக பயிற்சியளித்து விவசாய பணிகளில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களை இயக்குபவர்களாக உருவாக்கி அவர்களுக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். மேலும் நியாயவிலை கடைகளில் சிறு தானியங்களை விற்க தகுந்த முயற்சிகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் சிறுதானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சி பாஸ்கர பாண்டியன்,  திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி வி சுரேஷ், வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் எஸ் ரமேஷ் மற்றும் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய் நீஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...