2-வது சுகாதார உச்சி மாநாட்டில் ஜிதேந்திர சிங் உரை

புதுதில்லி ஹோட்டல் தாஜ் நகரில் நடைபெற்ற அமெரிக்க இந்திய வர்த்தக சபையின் (ஏஎம்சிஏஎம்) இரண்டாவது சுகாதார உச்சி மாநாட்டில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்  ஜிதேந்திர சிங் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார பராமரிப்பு சேவைகள் கிடைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“புதுமையான, எளிதில் அணுகக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் கிடைப்பதை விரைவுபடுத்துதல்: தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றம்” என்ற இந்த உச்சிமாநாட்டின் மையக்கருத்தை அமைச்சர் பாராட்டினார். இந்தியாவில் அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

சுகாதார சேவைகளில் அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள்,  தொழில்துறைப் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்த வகையான உச்சிமாநாடுகள் முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என்றும் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

தொற்று நோய்கள் ஒழிப்பு, தொற்றா நோய்களைக் குறைத்தல், சுகாதார குறியீடுகளை உருவாக்குதல், நிலையான முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தான்  அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.  செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்றவற்றால் சுகாதார சேவைகளில் நமது திறன்களை கணிசமாக மேம்படுத்த முடியும் அவர் குறிப்பிட்டார்.

பொது சுகாதாரம் என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல எனவும் தனியார் பங்களிப்பு இதில் சமமாக முக்கியமானது என்றும் அமைச்சர்  ஜிதேந்திர சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.