பாரம்பரிய தலங்களை பாதுகாப்பதில் இந்தியா முன்னோடியாக திகழும்

பாரம்பரிய தலங்களை பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வந்த உலகப் பாரம்பரிய குழுவின் 46-வது வருடாந்திர கூட்டம் இன்று  நிறைவடைந்தது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், உலகப் பாரம்பரிய தலங்கள் மாநாட்டின்  முடிவுகளை செயல்படுத்த இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளிலும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்வதன் வாயிலாக எல்லை கடந்து பணியாற்றும் திறன் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள 13 இடங்கள் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர்  குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து 43-வது  பாரம்பரிய தலமாக அசாமில் உள்ள மொய்தாம்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறிய அமைச்சர் இதன் மூலம் உலக அளவில் அதிக பாரம்பரிய தலங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி காசி விஸ்வநாதர் ஆலய பெருந்திட்ட வளாகம், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம், பண்டை கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாக கட்டுமானம் போன்ற பாரம்பரிய தலங்கள் பாதுகாப்பு பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...