அமெரிக்காவில் இந்தியாவை அவதூறாக பேசியதற்காக ராகுலின் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய ப.ஜ.க கடிதம்

‘அமெரிக்காவில் இந்தியாவை அவதூறாகப் பேசியதற்காக, ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி பா.ஜ., சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல், பல்கலை மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், சீக்கியர்களின் நிலை மற்றும் இடஒதுக்கீடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் முன் வைத்தார். இதற்கு பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தன. சீனாவை ஊக்குவிக்கிறது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசியவதா? என பா.ஜ., குற்றம் சாட்டியது.

தற்போது, லோக்சபா சபாநாயகருக்கு பா.ஜ., எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராகுல் தனது பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார். அவர் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகன் என்ற முறையில் ராகுல் வெளிநாட்டு மண்ணில், இந்தியாவை அவதூறாக பேசுவது எந்த வகையிலும் சரியானது அல்ல. இது போன்ற கருத்துக்களை ராகுல் கூறுவதால், நாட்டின் சர்வதேச உறவுகளைப் பாதிக்கக்கூடும்.

இது தேச விரோதச் செயல். நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது. ராகுலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...