தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவராக இருந்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.எம்.மிஸ்ரா சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், மனித உரிமைகள் கமிஷனின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று கூடியது.
இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ள லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தேசிய மனித உரிமைகள் கமிஷனின் புதிய தலைவராக யாரை தேர்வு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவிக்கு, பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டாலும், சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிப தியாக இருந்து ஓய்வுபெற்ற டி.ஒய்.சந்திரசூட் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |