H.M.P வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: ஜேபி நட்டா

”சீனாவில் ஏற்பட்டுள்ள எச்.எம்.பி.வி., நோய்த்தொற்று தொடர்பாக யாரும் கவலைப்பட தேவையில்லை. மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது,” என்று சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறினார்.

அவர் கூறியதாவது:

எச்.எம்.பி.வி., என்பது புதிய வைரஸ் அல்ல என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது, 2001ம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. பல்லாண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த வைரஸ், காற்றின் மூலம், சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர் காலத்தில் தான் அதிகம் பரவும். வசந்தகாலத்தின் ஆரம்ப நாட்களிலும் பரவும்.

சீனாவில் சமீபத்தில் பரவி வரும் வைரஸ் தொடர்பான சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சார்பில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனமும் சூழலை மிகுந்த பொறுப்புடன் கண்காணித்து வருகிறது. விரைவில் அதன் அறிக்கையை நமக்கு அளிக்க இருக்கிறது. சுவாசக்கோளாறு தொடர்பான நோய்க்கிருமிகள் பாதிப்பில் திடீர் அதிகரிப்பு எதுவும் இந்தியாவில் இல்லை என்பது தரவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.நிலைமையை ஆய்வு செய்ய, சுகாதாரப்பணிகள் பொது இயக்குனர் தலைமையில் கூட்டுக்குழு கூட்டம் ஜன.,4ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் முழுமையான கண்காணிப்பில் உள்ளனர்.

சுகாதார ரீதியில் ஏற்படக்கூடிய எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாரும் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு நட்டா தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...