டில்லியை குப்பை கிடங்காக கெஜிரிவால் மாற்றிவிட்டார் – அமித்ஷா

டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனை நதியை மாசுபடுத்தி விட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. தலைநகரின் மோசமான நிலைக்கு கெஜ்ரிவால் நிர்வாகமே காரணம். டில்லியை குப்பை கிடங்காக கெஜ்ரிவால் மாற்றிவிட்டார். யமுனையை மாசுபடுத்தி விட்டார். நகரின் உள்கட்டமைப்பு சிதைந்து வருகிறது.

டில்லியில் சரியான கழிவுநீர் வசதிகள் இல்லாததால் மழைக்காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், டில்லியில் மழையால் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது வேறு எங்கும் நடக்கவில்லை, ஆனால் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பை ஏற்காமல் சாக்குப்போக்குகளை தொடர்ந்து கூறுகிறது. ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் தனது தோல்விகளை மறைக்க அற்ப அரசியலை கெஜ்ரிவால் செய்து வருகிறார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யமுனையில் விஷம் கலந்திருப்பதாக கெஜ்ரிவால் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். டில்லி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. யமுனை நதி முன்னெப்போதையும் விட மாசுபட்டுள்ளது. மேலும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மக்கள் தன்னை நிராகரிப்பார்கள் என்று கெஜ்ரிவால் சாக்குப்போக்கு கூறுகிறார். டில்லி வாக்காளர்கள் பிப்ரவரி 5ம் தேதி ஆம் ஆத்மி கட்சியை அகற்றி பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பா.ஜ., வெற்றி பெற்றால் மாற்றம் ஏற்படும். டில்லியை உலகின் முதல் தலைநகராக மாற்றுவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...