டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்பதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் – ஜெய்சங்கர்

டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்பதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என டில்லி ஆம்ஆத்மி அரசை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த டில்லி மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆம் ஆத்மி ஆட்சியில் 10 ஆண்டுகளாக நகரம் பின்தங்கி உள்ளது. நாட்டின் சிறந்த வளர்ச்சிகளுக்கு டில்லி ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் குறித்து அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை.

தேசிய தலைநகரில் உள்ள மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு செய்யவில்லை. சுத்தமான தண்ணீர், மின்சாரம், சுகாதாரம், வீடுகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை ஆம் ஆத்மி கட்சி வழங்கவில்லை. நகரம் பின்தங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. வரவிருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு கட்டாயமாக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.

நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், உலகத்திடம் ஒரு விஷயத்தை மறைக்கிறேன். வெளிநாடுகளுக்குச் சென்று, தேசிய தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்கவில்லை, சிலிண்டர்கள் இல்லை, குழாய் தண்ணீர் கிடைக்கவில்லை என்று சொல்ல வெட்கப்படுகிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.